எங்க ஊர்க்கோவில் திரு விழாவுக்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று பொழுது போக்கும் நிகழ்ச்சிக்கு நாங்கள் ஊர் பஞ்சாயத்தை கூட்டி இருந்தோம். அப்போது வழக்கம் போல் பெருசுகள் ஒயிலாட்டம், கரகாட்டத்தை பற்றி பேச்சை ஆரம்பித்தார்கள். நாங்களோ செம கடுப்பாகி இந்த வருடம் சினிமா டான்ஸ் குரூப் தான் நடத்தணும். காலத்துக்கு ஏத்த மாதிரி மாற வேண்டாமா. எந்த காலத்துல இருக்கீங்க என்று நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் கொஞ்சம் சவுண்ட் போட்டோம்.