அன்னைக்கு மருத்துவமனையில் இரவு ஷிஃப்ட்டை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து அசந்து தூங்கி கொண்டிருந்தேன். அப்போது அக்கா தொடர்ந்து போன் செய்ய, முதலில் போன் ரிங் செய்வதை கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் போன் சத்தம் கேட்டு முழித்தேன். அப்போது அக்கா, என்னடா நல்ல தூக்கமா, சாரி டா. நான் வரும் போது லேப்டாப்பை வீட்ல மறந்து வச்சுட்டு வந்துட்டேனு நினைக்குறேன்டா. என் ரூம்ல இருக்கானு பாரு என்றாள். நானும் அக்கா ரூமில் சென்று பார்த்தேன். பெட்டில் லேப்டாப் இருந்ததை அக்காவிடம் சொல்லிவிட்டு,