ஊரே பனிரெண்டாவது ரிசல்ட்டுக்காக பரபரப்போடு காத்திருந்த போது நான் எப்படி, எங்கே எஸ்கேப் ஆவது என்று தெரியாமல் அலைபாய்ந்து கொண்டு இருந்தேன். அப்போது தான் ஆந்திராவில் இருக்கும் என்னோட பெரியம்மா ஞாபகம் வர, ஏற்கனவே வீட்டில் ஆட்டையை போட்ட பணத்தோடு ஆந்திராவுக்கு டிரெயின் ஏறி விட்டேன். அங்கே போன உடனே பெரியம்மா வீட்டுக்கு போய் விடக்கூடாது. அங்கேயும் வலை வீசி தேடுவார்கள்